அதிர்ச்சித் தகவல்கள்-: வடமாகாண சபையின் பின்னணியில் புலிகளை அழித்தவர்கள்!

இன்று வடக்கு மாகாண சபையை நடத்துவது ஐங்கரநேசனும் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் என்றால் அது முழுதான உண்மையாகிவிடாது. இந்த இருவரின் பின்னணியிலும் விடுதலைப் புலிகளின் அழிவுடன் நேரடித் தொடர்புடைய அவுஸ்திரேலிய வாசியான தமிழர் ராசைய்யா நிமலன் கார்த்திகேயன் என்பவர் செயற்படுகிறார். வட மாகாண சபையின் வெற்றுத் தீர்மானங்கள், சுன்னாகம் நீலத்தடி நீரில்பிரச்சனையில் தொடர்புடைய அழிவுகள் உட்பட நிர்வாகிகளை நியமிப்பதிலும் நிமலன் கார்த்திகேயனை மீறி யாரும் எதுவும் செய்துவிட முடியாது.

இன்று புலம்பெயர் நாடுகளிலிருந்து நிகழ்த்தப்படும் அழிவுகளின் பின்னணியில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான மேற்கு நாடுகளின் முகவர்களாகச் செயற்பட்ட பலர் செயற்படுகின்றனர். புலம்பெயர் நாடுகளில் தமது சொந்த நலன்களுக்காகவும், அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் சீரழிவு நடவடிக்கைகளுக்காகவும் பல்வேறு அளவுகளில் குழுக்களும் தனி நபர்களும் செயற்படுகின்றனர். இவர்களின் செயற்பாடுகளுக்காக பெரும் நிதி கொடுப்பனவுகளை மேற்கு ஏகாதிபத்தியங்கள் மேற்கொள்கின்றன.
அவுஸ்திரேலியாவிலிருந்து மட்டும் மூன்று வேறுபட்ட குழுக்கள் ஐங்கரநேசன் மற்றும் விக்னேஸ்வரன் ஊடாக அழிவுகளை ஏற்படுத்த முடுக்கிவிடப்பட்டுள்ளன. தமிழர்களின் உரிமைப் போராட்டத்தில் அக்கறையுள்ளவர்களைத் தொடர்புகொண்டு அவர்களைத் திசைதிருப்புவது. புதிய முற்போக்கு ஜனநாயகக் குழுக்கள் தோன்றிவிடாமல் தடுப்பது, போராளிகளின் தகவல்களைச் சேகரித்து அவற்றை உளவு நிறுவனங்களிடம் ஒப்படைப்பது போன்ற நடவடிக்களிலிருந்து, கருத்துருவாக்கம் ஏற்படுத்துவது போன்றவை வரை இக் குழுக்களும் தனி நபர்களும் மேற்கொள்கின்றனர்.
போராட்டத்திலும் அரசியலும் அக்கறையுள்ள தனி நபர்களை தமது பண உதவியில் தங்கியிருக்கும் நிலையை ஏற்படுத்தும் இத் தனி நபர்களும் குழுக்களும் விக்னேஸ்வரனையும் ஐங்கரநேசனையும் விட ஆபத்தானவர்கள். முதமைச்சர் விக்னேஸ்வரன் நிமலன் என்ற முகம்தெரியாத ஐந்தாம் படை ஏஜன்ட் ஒருவரின் கைப்பொம்மையாகச் செயாற்படுகின்ற அளவிற்கு இக் குழுக்களின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
இலங்கை அரசிற்கு எதிரானவர்கள் போன்ற தோற்றப்ப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ளும் இக் குழுகளும் தனி நபர்களும், தாம் பெற்றுக்கொள்ளும் பணத்திற்காக அமெரிக்கா போன்ற நாடுகள் ஊடாக இலங்கைப் பேரினவாத அரசிற்குச் சார்பாகச் செயற்படுகின்றனர்.
கொழும்பில் வசிக்கும் சட்டத்தரணி புவிகரன் என்பவரே தமிழ் மக்கள் பேரவை முன் மொழிந்த யாப்பு மாற்ற வரைபை எழுதினார் என கூறிய போதும், அத்தீர்மானம் அவுஸ்திரேலியாவில் நிமலன் கார்த்திகேயன் உட்பட்ட சிலரினாலேயே எழுதப்பட்டது. தவிர, வர்த்தமானியில் பிரசுரிகப்படாத முதலமைச்சரின் சட்டவிரோத நிர்வாக நியமனங்களின் பின்னால் நிமலன் கார்திகேயன் செயற்படுகிறார் என்பது ஆதாரபூர்வமாக நிறுவக்கூடிய உண்மை.
கடந்த மாதம் வட மாகண முதலமைச்சரால் உருவாக்கப்பட்ட பெண்கள் பிரச்சனை தொடர்பான அமைச்சுக் குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்ட விஜயலக்சுமி என்பவர் கனடாவில் வசிப்பவர். நிமலன் கார்த்திகேயன் மக்களின் வரிப்பணத்திலிருந்து பெர்ந்தொகைப் பணத்தை வாரியிறைத்து கனடாவிலிருந்து தனது அடிமையை இறக்குமதி செய்து இந்தப் பதவியை வழங்கியுள்ளார்.
தவிர, வடக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சர் அமைத்த போலி நிபுணர் குழு சுன்னாகம் நிலக்கீழ் நீரை மாசடையவில்லை என அறிவித்தது தெரிந்ததே, இப் போலி நிபுணர் குழுவின் அறிக்கைக்கு முன்பதாக அவுஸ்திரேலியாவிலிருந்து மற்றொரு போலி அறிக்கையும் ஐங்கரநேசனைக் காப்பாற்றும் நோக்கில் வெளியாகியிருந்தது, இந்த இரண்டு அழிவு நடவடிக்கைகளின் பின்னணியிலும் நிமலன் கார்த்திகேயனின் பங்கே பிரதானமானது,
பிரித்தனியாவிற்கு விக்னேஸ்வரன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது நிமலனை மீறி அவரை யாரும் தொடர்புகொள்ளக்கூட முடியவில்லை என்பது பலரின் குற்றச்சாட்டாகவிருந்தது, ஆனால் அதன் பின்னாலிருந்து பெரும் அழிவிற்கான திட்டமிடலை யாரும் கண்டுகொள்ளவில்லை.
அமரிக்கவிலிருந்து செயற்படும் இளம் வழக்குரைஞர் தாஷா மனோரஞ்சன், பிரித்தானியாவிலிருந்து கனடாவிற்குச் சென்று அமெரிக்க ராஜாங்கச் செயலகத்தில் தமிழ் அமைப்புக்களைக் கையாளும் நோக்கில் வேலைபார்க்கும் மரியோ அருள்தாஸ் போன்ற நிமலனுடன் இணைந்து செயற்படும் உளவு நிறுவன ஏஜன்டுகள் தொடர்பான முழுமையான விபரங்களையும், இவர்களின் மூளையாகச் செயற்படும் சுதா நடராஜா போன்றவர்கள் குறித்தும் விபரிப்பதற்கு முன்பதாக நிமலனின் பின்னணியை அறிந்துகொள்வது அவசியமானது.
United Nations Development Programme (UNDP) என்ற அமைப்பில் தொழில்ரீதியாக 2002 ஆம் ஆண்டு இணைந்துகொண்ட ராசையா நிமலன் கார்த்திகேயன் அதன் ஊடாகவே ஈழப் போராட்டத்தில் இணைப்பை ஏற்படுத்திக்கொள்கிறார். தன்னைத் தீவிர புலி ஆதரவாளராகக் காட்டிக்கொண்ட நிமலன் இலங்கை அரசுடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணிக்கொள்வதற்கு UNDP ஐக் காரணம் காட்டினார்.
விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசிற்கும் இடையிலான சமாதானப் பேச்சுக்களின் பின்னர் கிளிநொச்சியில் UNDP இன் திட்டமிடல் உதவி முகாமையாளராக நியமிக்கப்படுகிறார். 2003 ஆம் ஆண்டில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கொழும்புக் கிளையின் தலைவராகப் பொறுப்பேற்ற நிமலன், சுனாமிக் காலத்தில் வழங்கப்பட்ட நிதியை கையாணவர்களில் ஒருவர். பின்னதாக ராஜபக்ச அரசின் விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளின் போது சுதா நடராஜாவுடன் இணைந்து கலந்துகொண்ட நிமலன் அமெரிக்க உளவாளி ரிச்சார்ட் ஆர்மிதாஜுடன் நெருக்கமான உறவுகளைப் பேணி அவரின் நம்பிக்கைக்குரிய ஏஜண்டாக மாறினார்.
அமெரிக்காவின் துணை ராஜாங்கச் செயலாளராகவிருந்த ரிச்சார்ட் ஆர்மிதாஜ் என்ற பயங்கரவாதி, புலம்பெயர் நாடுகளிலிருந்த தனது முகவர்கள் ஊடாக விடுதலைப் புலிகளை அழிப்பதற்கான இடைவெளியை ஏற்படுத்திய பின்னர் இலங்கை அரசுடன் கைகோர்த்துக்கொண்டார். அவரால் பயிற்றுவிக்கப்பட்ட ஏஜண்டுகள் இன்றும் தேசியவாதிகள் என்ற வேடமணிந்து அழிவுகளைத் துரிதப்படுத்துகின்றனர்.
இன்று தமிழ்ப் பேசும் வட கிழக்கு மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணக்க அரசியல் என்ற அழிவு நடவடிக்கைகளின் பின்னால் அணிதிரட்டப்பட்டுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக மக்கள் சார்ந்த அமைப்புக்கள் தோன்றிவிடக் கூடாது என்ற நோக்கத்தில், எதிர்ப்புக் குழுக்களையும் தமது கட்டுப்பாட்டினுள் வைத்துக்கொள்வதற்கான அரசியல் நடவடிக்கையை அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகள் இலங்கை அரசுடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. அதன் முகவர்களில் ஒருவரே இன்று வடமாகாண சபையை நடத்தும் ராசையா நிமலன் காfர்த்திகேயன். இவ்வாறான விசக் கிருமிகளை அன்னியப்படுத்துவதும் புதிய மக்கள் சார்ந்த அரசியலை முன்வைப்பதும் இன்றைய சமூக உணர்வுள்ள ஒவ்வொருவரதும் கடமை!