அரசியல் கைதிகளின் விடுதலைக்காக உயிர் துறந்த மாணவன் செந்தூரனின் உடல் தீயுடன் சங்கமம்!

அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் எழுதி வைத்த பின்னர், ரயில் முன் பாய்ந்து உயிரிழந்த மாணவன் இராஜேஸ்வரன் செந்தூரனின் உடல், கந்தன்காடு இந்து மயானத்தில் இன்று காலை தகனம் செய்யப்பட்டது.
   
மாணவனின் இறுதிக் கிரியைகள் கோப்பாய் வடக்கிலுள்ள அவரது வீட்டில் நடைபெற்று, கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவர்களால் உடல் மயானத்துக்கு எடுத்து வரப்பட்டு தகனம் செய்யப்பட்டது. மிகவும் அமைதியான முறையில் நடைபெற்ற இறுதி நிகழ்வில், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இந்த மாணவனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வடமாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டது.







                                                                                                                   




நன்றி: செய்தி இணையம்