காணாமல் போன தந்தை,மகன் தொடர்பில் தகவல் தாருங்கள்; சுன்னாகம் பொலிஸ் மக்களிடம் கோரிக்கை

கடந்த ஒரு வருடங்களாக உடுவில் மானிப்பாய் வீதியில் வசிக்கும் இளம் குடும்பத்தரான பிறேம்குமார் நிந்துஜன் வயது 30 மற்றும் அவருடைய மகன் நிந்துஜன் தரணிகன் வயது 03 காணாமல் போயுள்ளார்கள்.
 
இவர்கள் காணாமல் போனமை சம்பந்தமாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில அவருடைய மனைவியினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
ஆனாலும் இது வரையில் இவர் சம்பந்தமான எந்தவொரு தகவலும் இதுவரையில் கிடைக்கப் பெறாத நிலையில் இவர்கள் சம்பந்தமான விபரங்களைத் தந்துதவும் படி சுன்னாகம் பொலிசாரினால் பொது மக்களிடம் இருந்தும் கோரப்பட்டுள்ளது.
 
இவர்கள் சம்பந்தமான தகவல் தெரிந்தவர்கள் சுன்னாகம் பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கம் 0212240323 அல்லது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி 0774673943 தொலைபேசியுளுடனேயோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.