நெடுந்தீவில் ‘நாங்கள்’ இயக்கத்தின் கல்விப்பணி!

<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நெடுந்தீவு பிரதேச அதிகாரி திரு.ஜான் அவர்களது வேண்டுகோளின் பிரகாரம், அப்பிரதேசத்தில் கல்வி கற்க ஆர்வம் இருந்தும் குடும்ப பொருளாதார ரீதியாக நலிவுற்றுள்ள பாடசாலை செல்லும் மாணவர்களது கற்றல் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

வடக்கு கிழக்கில் செயல்பாட்டு வலையமைப்பைக்கொண்டுள்ள மக்கள் ஆட்சி அரசியலுக்கான உந்துசக்தி இயக்கமாகிய ‘நாங்கள்’ இயக்கத்தின் தீவுகள் பிராந்தியத்துக்கான செயல்பாட்டாளர்களான சி.அனுசன், க.கயூரன் ஆகியோரால் குறித்த கற்றல் உபகரணங்கள் 09.04.2015 வழங்கி வைக்கப்பட்டன.

இந்த மக்கள் நலப்பணி திட்ட நிகழ்ச்சியில், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் யாழ்ப்பாணம் மாவட்ட உத்தியோகத்தர் திரு.ஐ.தபேந்திரன், மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவி அதிகாரி சி.வினோதினி மற்றும் நாங்கள் இயக்கத்தின் யாழ்ப்பாணம் மாவட்ட தலைமை செயல்பாட்டாளர் செ.பிரதாப் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.