ஊவாவில் பல பகுதிகளில் மண்சரிவு; 300ற்கும் மேற்பட்டோர் பாதிப்பு, ரயில் சேவைகள் இடைநிறுத்தம்

மீரியபெத்த மண்சரிவு; உயிரிழப்பு 10ஆக அதிகரிப்பு (Photos)
கொஸ்லாந்தை மீரியபெத்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 10 பேரின் சடலங்கள் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளன.
இன்று காலை, கொஸ்லாந்தை மீரியபெத்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் சுமார் 300ற்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
இந்த அனர்த்தத்தினால் 150ற்கும் அதிகமான வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஈ.எல்.எம்.உதயகுமார கூறுகின்றார்.
landslide koslanda landslide koslanda 1 landslide koslanda 3 landslide koslanda 4