முள்ளிவாய்க்கால் நினைவு வீரவணக்க ஒன்றுகூடல் - பழ. நெடுமாறன் !!!

முள்ளிவாய்க்கால் நினைவு வீரவணக்க ஒன்றுகூடல் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை.. முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு வீரவணக்கம் செலுத்த மே 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தமிழர்கள் மற்றும் மாணவர்களின் ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.
இந்நிகழ்ச்சிக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்குகிறார். தமிழகத்திலும் பிறமாநிலங்களிலும் இருந்து பல்லாயிரக்கணக்கானத் தமிழர்களும் மாணவர்களும் 18.05.2014 அன்று மாலை 5 மணிக்கு ஒன்றுகூடி வீரவணக்கம் செலுத்தவிருக்கும் நிகழ்ச்சியில் திரளாகக் கலந்துகொள்ளும்படி அனைவரையும் வேண்டிக்கொள்கிறேன்.


        அன்புள்ள, 
   (பழ. நெடுமாறன்)
        தலைவர்.