இராணுவ கெடுபிடிகளால் காடுகளிலும், தமிழ் நாட்டுக்கும் செல்லும் ஈழத்தமிழர்கள் !!!

(உ+ம்) நிழற்படம்
ஈழத்தமிழர்கள் மீண்டும் ஏதிலிகளாக தமிழகம் செல்ல ஆரம்பித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் அகதிகள் அமைப்பு கூறுகின்றது.

நேற்றும் ஐந்து குழந்தைகள் உட்பட  12 பேர் தமிழகம் நோக்கி கடல்வழியாக சென்றுகொன்டு இருக்கையில் இராமேஸ்வரத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் மீண்டும் வடக்கிலும் கிழக்கிலும் விடுதலைப்புலிகளை தேடும் நடவடிக்கைகள் என்றபெயரில் எராளாமனோர் கைது செய்யப்படுவதும் சிறையில் அடைப்பதும் தொடர்கின்றன.

இதன்காரணமாகவே முன்னாள் போராளி குடும்பங்கள், மற்றும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இருந்தோர்கள் நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர் என கூறப்படுகின்றது.