
இந்த வழியால் கோணாவில் பாடசாலைக்குச் செல்லும் மாணவிகளையும் அக்கராயன் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கிளிநொச்சி தனியார் கல்வி நிலையத்திற்கு செல்லும் மாணவிகளுக்கும் இராணுவத்தினர் தொல்லை கொடுக்கின்றனர். பாலியல் வார்த்தைகளை பிரயோகம் செய்வது, காதலிக்குமாறு கேட்பது என்று மாணவிகளுக்கு இராணுவத்தினர் இடையூறு விளைவிக்கின்றனர்.
காவலரண்களில் உள்ள சில இராணுவத்தினர் பாடசாலை மாணவிகளைக் கண்டதும் தமது கீழாடைகளை கழற்றிவிட்டு நிற்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் மாணவிகள் அந்த வழியால் போக்குவரத்தை மேறகொள்ள முடியாத நிலமை காணப்படுவதுதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சிப் பகுதிக்கும் அக்கராயன் கோணாவில் பகுதிக்குள் உள்ள ஒரே மார்க்கம் அதுவென்பதால் வேறு பாதைகளைப் பயன்படுத்தியும் மாணவர்கள் போக்குவரத்து செய்ய முடியாத நிலமை காணப்படுகிறது. இதனால்
பாடசாலை மற்றும் தனியார் கல்வி நிலையங்களுக்குச் செல்லும் மாணவிகள் இராணுவத்தினரின் பாலியல் தொல்லைகளை தாண்டியே பயணம் செய்ய வேண்டியுள்ளது.