கடலில் குளிக்கச்சென்ற மூவரை காணவில்லை : மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு பனிச்சையடிக் கடலில் குளிக்கச் சென்ற மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமற்போயுள்ளனர்.
 
மட்டக்களப்பைச் சேர்ந்த 19, 20 ,23 வயதான மூன்று இளைஞர்களே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
நேற்று மாலை மேலும் சில நண்பர்களுடன் கடலில் குளித்துக்கொண்டிருந்தபோது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
 
கடலில் குளித்துக்கொண்டிருந்த ஏனைய நண்பர்கள் திரும்பி கரைக்கு வந்துள்ள நிலையில், குறித்த மூவரும் கடலில் மூழ்கியிருக்கலாம் என கருதப்படுகின்றது.
 
நீரில் மூழ்கியவர்களை பொலிஸாரும் கடற்படையினரும் இணைந்து தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.