மட்­டக்­க­ளப்பில் யுத்த நிறைவின் பின்னர் சிறுவர் தொழி­லா­ளர்கள் அதி­க­ரிப்பு

யுத்த நிறைவின் பின்னர் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் சிறுவர் தொழி­லா­ளர்கள் எண்­ணிக்கை அதி­க­ரித்து காணப்­ப­டு­வ­தாக இப்­ப­குதி மக்கள் விசனம் தெரி­விக்­கின்­றனர். குறிப்­பாக 12 வயது முதல் 16 வய­திற்­குட்­பட்ட சிறு­வர்­களே பல்­வேறு இடங்­க­ளிலும் தொழில் புரி­வதை அவ­தா­னிக்க முடி­வ­தாக சுட்­டிக்­காட்­டு­கின்­றனர். எரி­பொருள் நிரப்பு மையங்கள், தேனீர் சாலைகள்,, பழக்­க­டைகள், நகை விற்­பனை நிலை­யங்கள் உட்­பட பல இடங்­களில் இத்­த­கைய சிறு­வர்கள் தொழில் நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். அது­மாத்­தி­ர­மின்றி பஸ் தரிப்பு நிலை­யங்கள் மற்றும் தொட­ரூந்து நிலை­யங்­க­ளிலும் இத்­த­கைய சிறு­வர்கள் வியா­பார நட­வ­டிக்­கை­களில் ஈடுபட்­டுள்­ளதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. இத்­த­கைய சிறுவர் தொழி­லா­ளர்கள் குறித்து மாவட்ட தொழில் திணைக்­களம் அல்லது சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்காமை குறித்தும் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.